Thursday, December 18, 2008

காத்திருப்பேன்!

வறுமையே ஏன் என் இளமையைத் தின்றாய்?
ஏழ்மையே ஏன் என் இளமையை நோகடித்தாய்?
வாய்மையே ஏன் என் இளமைக்குப் பகையானாய்?
இல்லாமையே ஏன் என் இளமைக்கு இடையுரானாய்?
இன்பமே ஏன் என் இளமைக்கு எதிரியானாய்?
துன்பமே ஏன் என் இளமைக்கு துனைபோனாய்?
என் இளமையை வறுமை தின்றாலும்
என் திறமையை நம்பி வாழ்கிறேன்
என் துன்பம் எனைத் துரத்தினாலும்
நான் நிற்காமல் ஓடுகிறேன் என் இலட்சியத்தை நோக்கி
எனக்கோர் காலம் கனியும் வரை காத்திருப்பேன்?

No comments:

Post a Comment