பொங்கி வரும் காவேரி என
பொங்கட்டும் புது வாழ்வு
சீறிவரும் காளைபோல
சிரிக்கட்டும் புது வருடம்
வருகின்ற மகிழ்ச்சிகளை
மூளையில் வைப்போம்
வந்த துன்பங்களை
மூலையில் வைப்போம்
வீசுகின்ற தென்றலுக்கு
ஜன்னல் திறப்போம்
வீசிய சூறாவளிக்கு
வாதில் அடைப்போம்
வருகின்ற காலம்
வசந்த காலம் ஆகட்டும்
வீசுகின்ற காற்றெல்லாம்
தென்றல் காற்றாகட்டும்
வருகின்ற மழையால்
மரங்களெல்லாம் சிரிக்கட்டும்
வருடுகின்ற மகிழ்ச்சியால்
மனமெல்லாம் மகிழட்டும்
வருகின்ற புத்தாண்டு
புத்துணர்ச்சி கொடுக்கட்டும்
காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்
கையில் காசு வைத்திருப்போர்
இல்லாதவர் பையில் வையுங்கள்
பையில் வைத்திருப்போர்
இல்லாதவர் கையில் கொடுங்கள்
கட்டுகின்ற கட்டிடமெல்லாம்
கல்விமையம் ஆகட்டும்
தீட்டுகின்ற திட்டமெல்லாம்
திறன்பட செயல்படட்டும்
சாதி மதம் இல்லையென
சான்றிதல் கொடுப்போம்
சமத்துவம் ஒன்றேயென
தம்பட்டம் அடிப்போம்
வறுமையே இல்லை என
வாழ்த்திடலாம் வாருங்கள்
திறமை இருக்கும் இடத்தை
போற்றிடலாம் வாருங்கள்
அநாதை இல்லங்களை
அரவணைக்க வாருங்கள்
ஊனமுற்ற குழந்தைகளுக்கு
ஊக்கம் கொடுக்க வாருங்கள்
அன்பிருக்கும் இடத்தை
ஆதரிப்போம் வாருங்கள்
குணம் இருக்கும் இடத்தை
கும்பிடலாம் வாருங்கள்
முதியோர் இல்லங்களை
மூட வைப்போம்
பெற்றோரை விரட்டியடித்த
மூடர்களை முதுகில் அடிப்போம்
பெற்ற தாய்க்கு
பெருமை சேர்ப்போம்
நற்ற மரக்கன்றை
நாளும் வளர்ப்போம்
கல்வி கற்றவரை
அரசியலுக்குத் தேர்ந்தெடுப்போம்
குடும்ப அரசியலுக்குக்
கொல்லிப் போடுவோம்
கலை வளர்க்கும்
கலைஞர்களை ஊக்குவிப்போம்
கொலை செய்யும் வெறியர்களை
கூண்டோடு அழிப்போம்
வேலையில்லாத திண்டாட்டத்தை
வேரறுக்க செய்திடுவோம்
பட்டினிஇல்லாத பாரதத்தை
பரந்து விரியச்செய்வோம்
நோயுற்றுக் கிடப்போரை
நோகாமல் கவனித்திடுவோம்
பாய் எனக் கிடப்போரை
பரம்பால் புடைத்திடுவோம்
இல்லம் இல்லாதவர்க்கு
இருக்க இடம் கொடுப்போம்
கல்வி கல்லாதவர்க்கு
கல்வி கற்றுக்கொடுப்போம்
படிக்காதவர்களே இல்லை என
பறை சாற்றிடுவோம்
இல்லாதவர்களே இல்லை என
இதயம் திறந்து சொல்லிடுவோம்
நிழல் தரும் மரங்களை
நெடுகெங்கிலும் வைப்போம்
நிஜம் சொல்லும் மனிதர்களை
நெஞ்சத்தில் வைப்போம்
சுவை தரும் கனியை
தினம் தோறும் உண்போம்
சுகம் தரும் பாடலை
தினம்தோறும் கேட்போம்
--------------என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி
// கட்டுகின்ற கட்டிடமெல்லாம்
ReplyDeleteகல்விமையம் ஆகட்டும்
தீட்டுகின்ற திட்டமெல்லாம்
திறன்பட செயல்படட்டும் //
மாடர்ன் டே பாரதியார் மாதிரி அனல் பறக்குது உங்க கவிதையில்ல...
புத்தாண்டு வாழ்த்துகள் !!!
//
ReplyDeleteநோயுற்றுக் கிடப்போரை
நோகாமல் கவனித்திடுவோம்
பாய் எனக் கிடப்போரை
பரம்பால் புடைத்திடுவோம்
//
நாங்க Bed-ல தான் தூங்குறது..இப்ப என்ன பன்வீங்க !!!!
பெரிய..... வாழ்த்து. நன்றாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteஉங்களது கவிதையை படித்து பிடுத்து உலகுக்கு சொல்லிவிட்டேன்
நன்றி அ.மு.செய்யது.
ReplyDeleteநன்றி அமுதா
நன்றி வால்பையன்