Thursday, April 20, 2017

அம்மா!

அம்மா!

என் இதயத்தைப் பறித்து
எரியும் கொள்ளியில் இட்டாலும்
அது வெடித்து சிதறும்போது
"அம்மா" என்றழைத்தே மடியும்!

உனக்காக

ஒருமுறை தான் பிறப்பு வரும்
உனக்காக பிறந்து விட்டேன்!
ஒரு நொடியே உறங்கினாலும்
உன் மடிமீது துயில வேண்டும்
ஒருமுறை தான் இறப்பு வரும்
அதுவும் உன் மடிமீதே நிகழ வேண்டும்!



புகையே பகை!


இரு விரல்கள் காயம்பட்டு
இரு இதழ்கள் ஊணப்பட்டு
உட்கொண்ட புகையினால் 
உடலுக்குப் பகையாகி 
புற்று நோய்க்கு இரையாகி 
உயிர் துறக்கும் நிலை 
                         இனியும் வேண்டுமோ ?