Friday, January 2, 2009

மனிதன்

சாதி எனும் பெயரைச்சொல்லி
மனதை சங்கடப்படுத்தாதே
மதம் எனும் பெயரைச்சொல்லி
மனதை இரணம் ஆக்காதே
மொழி எனும் பெயரைச்சொல்லி
வன்முறைக்கு வழி செய்யாதே
மனிதன் எனும் பெயரைச்சொல்லி
மனதை மகிழச்செய்.

கருத்து

என் கவிதையில்
கரு இருந்தால் சொல்லுங்கள்
தினம்தோறும் பிரசவிக்க முயல்கிறேன்...
பிழை இருந்தால் சொல்லுங்கள்
மீண்டும் பிரசவிக்க கருவாக முயல்கிறேன்.

வியர்வைத்துளிகள்

என் இதயம் நனைந்தது
ஆம்
உன் இடுப்பு
மடிப்புகளில் வழிந்த வியர்வைத்துளிகளால்.

வேகத்தடை

உன் இடுப்பு மடிப்பு கூட
ஒரு வேகத்தடைதான்
ஆம்
என் கண்கள் ஏறி இறங்கும் போது.