Wednesday, April 1, 2009

என் தோழி நீ...

தினம்தோறும் உனைப் பார்க்க விரும்புகிறேன்
தினமுழுதும் உனை நினைக்க விரும்புகிறேன்
தினசரியை தினம் மறந்து
தினம் உனைப் படிக்க விரும்புகிறேன்
அதிகாலை சுப்ரபாதம் சுகம் மறந்து - உன்
சிரிப்பொலி கேட்க விரும்புகிறேன்
உளமார நான் பேச - உன்னருகில்
அமர விரும்புகிறேன்
உடல் அழகை சிலை வடிக்க கல் உண்டு - உன்
உள்ளதை சிலை வடிக்க -
என் இதயத்தைத் தர விரும்புகிறேன்...
கண்ணுக்கு காட்சி தரும் கன்னியர் ஆயிரம்பேர் -என்
கண்ணுக்குள் காட்சி தரும் கன்னி நீ ஒருத்தி
உளி கொண்டு எழுதினால்...உயிரற்றுப்போகும் என்று
நம் நட்பை
என் உதிரத்தால் எழுதினேன் பாறையில்...
என்னைப்போல் உனை நினைக்கிறேன்
என்னைவிட உனை மதிக்கிறேன்.
endrum natpudan...raajaa