தினம்தோறும்
நீர் ஊற்றினால்
நல்கனியை நமக்களிக்கும்
நல்லதொரு வாழை மரம்
அதைப்போல பல நண்பனுண்டு
வாரம்தோறும்
நீர் ஊற்றினால்
தெம்பூட்டும் இளநீரை
தென்னை நமக்களிக்கும்
அதைப்போல பல நண்பனுண்டு
எதிர்பார்ப்பு எதுவுமின்றி
எல்லோர்க்கும் பலனளிக்கும்
பிறதிபலன் பார்க்காமல்
நற்பலனை நமக்களிக்கும்
பனைமரம்போல் ஒரு
நண்பன் நீ மட்டும்தான்!
என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி