Thursday, July 30, 2009

வேண்டாத நோய்

குங்குமமப் பொட்டு வைத்து
குலமகள் காத்திருக்க

கொஞ்சி விளையாட மனமின்றி

மிஞ்சிச் சென்றுவிட்டான்

வஞ்சி அவளிடம்


வீட்டு முற்றத்திலே

முல்லைக்கொடி பூத்திருக்க

முகர்ந்து பார்க்க மனமின்றி

முண்டியடித்துச் சென்றான்

மூதேவி அவளிடம்

முகம் துடைக்க

முந்தானை கொடுத்தவளை

முகம் நோக்கி

முறைப்பது ஏனோ?

முகத்துக்கு முகம்

முந்தானை விரிப்பவளை

முகம் நோக்கி

முத்தமிடுவது ஏனோ?



Thursday, July 16, 2009

புன்னகைப் பூ

புன்னகைப் பூ ஒன்று
புதுச்சேலை கட்டுதம்மா
புத்துணர்ச்சி கொண்டு
புன்னகை சிந்துதம்மா

வெட்கப்பட்டு வெட்கப்பட்டு
வீதி வழி போகுதம்மா
நீதி வழி தவறாமல்
கலி உலகில் வாழுதம்மா.

Friday, July 10, 2009

ஒரு நூறாண்டு!

உன் மீது எனக்கோர் மோகமடி
உன்னால் நோகுது என் தேகமடி
உன்னருகே நானிருந்தால் போதுமடி
உனைப்பிரிந்தால் என்மனம் வாடுதடி
உன்னை நினைக்க ஒரு நொடி போதுமடி
உன்னை மறக்க ஒரு நூறாண்டு ஆகுமடி.