குங்குமமப் பொட்டு வைத்து
குலமகள் காத்திருக்க
கொஞ்சி விளையாட மனமின்றி
மிஞ்சிச் சென்றுவிட்டான்
வஞ்சி அவளிடம்
வீட்டு முற்றத்திலே
முல்லைக்கொடி பூத்திருக்க
முகர்ந்து பார்க்க மனமின்றி
முண்டியடித்துச் சென்றான்
மூதேவி அவளிடம்
முகம் துடைக்க
முந்தானை கொடுத்தவளை
முகம் நோக்கி
முறைப்பது ஏனோ?
முகத்துக்கு முகம்
முந்தானை விரிப்பவளை
முகம் நோக்கி
முத்தமிடுவது ஏனோ?