Thursday, July 30, 2009

வேண்டாத நோய்

குங்குமமப் பொட்டு வைத்து
குலமகள் காத்திருக்க

கொஞ்சி விளையாட மனமின்றி

மிஞ்சிச் சென்றுவிட்டான்

வஞ்சி அவளிடம்


வீட்டு முற்றத்திலே

முல்லைக்கொடி பூத்திருக்க

முகர்ந்து பார்க்க மனமின்றி

முண்டியடித்துச் சென்றான்

மூதேவி அவளிடம்

முகம் துடைக்க

முந்தானை கொடுத்தவளை

முகம் நோக்கி

முறைப்பது ஏனோ?

முகத்துக்கு முகம்

முந்தானை விரிப்பவளை

முகம் நோக்கி

முத்தமிடுவது ஏனோ?



1 comment:

  1. அதாவது கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது!
    குரங்கு மாதிரி வைப்பாட்டிய தேடிப்போய் எயிட்ஸ் வாங்கிவந்தான் சரியா!?

    ReplyDelete