காமத்துக்குப் பாய்விரித்து
கர்ப்பபையில் இடம் கொடுத்து
கருவறையில் எனை வளர்த்து
தெருவிலே போட்டுவிட்டாய்
காம வேதனையும் சுகமும்
உனக்குப் பத்து நிமிடம்
நீ சுமந்தது பத்து மாதம்
பலபேர் எனை அழைப்பது
"அனாதை" என்று பலவருடம்
பால் கொடுத்து வளர்க்கவேண்டிய
எனை நீ பாழக்கிவிட்டாய்
தாலாட்டி வளர்க்க வேண்டிய
எனை நீ தவிர்த்துவிட்டாய்
கருவிலே எனை நீ அழித்திருந்தால்
கவலையற்று இறந்திருப்பேன்
பெற்றுத் தெருவினிலே விட்டதினால்
தேடி அழைகிறேன் தினம்தோறும்
எனைப் பெற்றுடுத்த பெரும்தாய் யாரென்று?
yenna vichithiram
ReplyDeleteunakku kavidhai yelutha varuma ?