Saturday, December 20, 2008

என் நண்பன்

என்ன தவம் செய்தேனடா
என் நண்பன் நீயாக
என்ன தவம் செய்வேனடா
உன் நண்பன் நானாக

கண்ணுக்குள் வைத்திருக்கிறேன்
கருவிழியாக உன்னை
காற்று தூசி பட்டாலும்
கசக்க மாட்டேன் கண்ணை

கண்ணைக் கசக்கினால்
கருவிழியே நீ அழுவாய்
கருவிழி நீ அழுதுவிட்டால்
கலங்கிவிடும் என் இதயம்.

No comments:

Post a Comment