Tuesday, January 22, 2013

கொடுக்கலாம்.

கொடுக்கலாம்.
காசு இன்றி
கல்வி பயில்வோருக்கு
கடன் கொடுத்து வாழலாம்...

பசியோடு வந்தவர்க்கு
உணவு கொடுத்து
உன்னதமாக வாழலாம்...

ஆடை இல்லாதோர்க்கு
புத்தாடை வழங்கி
புனிதத்தைத் தேடலாம்...

பார்வை இழந்தோருக்கு
பாதை காண்பித்து
வழிகாட்டியாக மாறலாம்...

உறங்க இடமற்றோர்க்கு
இடம் அளித்து  -நல்
இதயத்தைக் காட்டலாம்...

தடிஊன்றி
தடுமாறும்
உள்ளத்துக்கு கொஞ்சம்
தயவு காட்டலாம்...

நன்மை செய்வோரை
நாளும் நினைத்து
நல்ல அன்பை நிலைநாட்டலாம்..

துன்பம் செய்வோரை
தூக்கத்திலும் நினைக்காமல்
துயரற்று வாழலாம்..

உன்னையே
நினைப்பவர்க்கு
உள்ளத்தையே கொடுக்கலாம்..

உனக்காக
வாழ்வோர்க்கு
உன் உயிரையும் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment