வட்ட நிலவே நீ என்ன அழகு ?
என் தோழியின் முகம் அழகினும் அழகு.
வாசம் கொண்ட மலரே நீ என்ன அழகு ?
என் தோழியின் பாசம் உனைவிட மெலிது .
புன்னகை சிந்திடும் - இந்த
பூ முகத்துக்கு பிறந்தநாள்!- நல்
அன்பை பொழிந்திடும்
அன்பு தங்கைக்கு இன்றே சிறந்த நாள்!
பொறுமை என்ற சொல்லுக்கு
புகலிடமே அவள் தான்!
பொறாமை என்ற சொல்லுக்கு
பொருளே இல்லை என்பதும் அவள் மட்டும் தான்!
எனக்குப் பிடித்ததும்
என் தோழி அவள்தான்
என்றும் எனக்குப் பிடிக்கும்
என் தோழி குணம் தான்!
காலம் நூறாண்டு அவள் வாழனும்
கவிதை நூறு அவள் பற்றி எழுதணும்
கல்லறைக்கு நான் போனபின்பும் - இந்த
கவிதையை செல் அரிக்காமல் அவள் காக்கணும் .
என் தோழியின் முகம் அழகினும் அழகு.
வாசம் கொண்ட மலரே நீ என்ன அழகு ?
என் தோழியின் பாசம் உனைவிட மெலிது .
அலை கொண்ட கடலே நீ என்ன அழகு?
அவள் அன்பு உனைக்காட்டிலும் பெரிது.
கலை கொண்ட சிலையே நீ என்ன அழகு?
கள்ளமில்லா அவள் உள்ளம் உனைவிட அழகு.
பூ முகத்துக்கு பிறந்தநாள்!- நல்
அன்பை பொழிந்திடும்
அன்பு தங்கைக்கு இன்றே சிறந்த நாள்!
பொறுமை என்ற சொல்லுக்கு
புகலிடமே அவள் தான்!
பொறாமை என்ற சொல்லுக்கு
பொருளே இல்லை என்பதும் அவள் மட்டும் தான்!
எனக்குப் பிடித்ததும்
என் தோழி அவள்தான்
என்றும் எனக்குப் பிடிக்கும்
என் தோழி குணம் தான்!
காலம் நூறாண்டு அவள் வாழனும்
கவிதை நூறு அவள் பற்றி எழுதணும்
கல்லறைக்கு நான் போனபின்பும் - இந்த
கவிதையை செல் அரிக்காமல் அவள் காக்கணும் .
என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி
No comments:
Post a Comment