Tuesday, January 22, 2013

பெண்ணொருத்தி நீ!

பொங்கி வரும் காவிரியும் தன்
புகழ் கெட்டுப் போகலாம் !

கரை புரண்டு ஓடிவரும்
கங்கையும் மாசு பட்டுப் போகலாம்  !

சுடுகின்ற சூரியனும் தன்
திசை மாறி உதிக்கலாம் !

குளிர்கின்ற சந்திரனும் தன்
நிலைமாறிப் போகலாம்!

குன்றாத மலையும் தன்
நிலை குலைந்து போகலாம்!

வற்றாத கடலும் தன்
பெற்ற புகழ் அழியலாம்!

வீசுகின்ற காற்றும்
விரதம் கொள்ளலாம் !

சுட்டெரிக்கும் நெருப்பும்
சுரனை கேட்டுப் போகலாம்!

நீல வானம் கூட தன்
நிறம் மாறிப் போகலாம்!

பொறுத்தாலும்   பூமிகூட தன்
பொறுமை இழந்து போகலாம்!

என் நிலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
எனை வெறுக்காத பெண்ணொருத்தி நீ!

No comments:

Post a Comment