Thursday, April 10, 2014

நல்லரசைத் தந்திடுவீர் (2014 அரசியல் களம்)

நெஞ்சு பொறுக்குதில்லை

நிகழ்கின்ற நிகழ்ச்சியாவும்
நஞ்சு மிகுந்த நாட்டினிலே
கெஞ்சி என்ன பயன்?

பஞ்சு இன்றி
பாவம்  மேனி மறைக்க ஆடைஇல்லை
கஞ்சி இன்றி
நெஞ்சு வற்றிப்போற நிலை  உண்டு.

நாட்டை சீர்திருத்த
நல்லவர் இங்குயாருண்டு?
சுடுகாட்டையும் சுருட்டிடும்
சூனியர் இங்குண்டு?

கூட்டணி சேர்ந்திடத்தான்
கூட்டு முயற்சி நடக்கிறது
ஓட்டுப் போடும் மக்களுக்கு
வேட்டுவைக்க கூட்டணி காத்திருக்கு.

பல ஆண்டுகாலம் ஆண்டும்
பலனில்லை யார்க்கும்
பல வாக்குறுதி யாவும்
பழிக்கவில்லை போலும்.

பட்டினியால் வாடும்
பலகோடி மக்களுக்கு
பலனளிக்க இந்த
பாரதத்தில் யாருமுண்டோ?

கோடிகளை சுருட்டிடத்தான் 
கோவணத்துணியையும் அவிழ்த்திடுவர்
மாடிகளை கட்டிடவே
மல்லுக்கட்டி போட்டி போட்டிடுவர்.

சட்டம் ஒழுங்கு எல்லாம்
சந்தியெல்லாம் சிரிக்குது
கெட்டபெயர் ஒன்று மட்டும்
பட்டமாய் பறக்குது

கற்ப்பழிப்பு சம்பவம்
கரைபுரண்டு ஓடுது
கன்னியர்க்கு காவல் என்பது
கட்டாயம் ஆகுது.
சங்கிலி பறிப்பு சம்பவம்
சகஜமாகிப் போனது
தாலிபோடும் கழுத்தைசுற்றி முள்
வேலி போடச்சொல்லுது.
ஆற்று மணலை  அள்ளி அள்ளி
காற்றோடிப் போனது காவிரி
சேற்று மிதந்த நிலம்தன்னில்
செங்கல் மலை உயர்ந்ததென்ன?
விலைவாசி உயர்வுக்கு
விடிவு உண்டோ?
விலையில்லா பொருட்களுக்கு
தடை உண்டோ?
ஓட்டுரிமை இங்கே
நோட்டுரிமை ஆகுது
சீட்டுக்கட்டுபோல ஒட்டு
சிதறிக் கிடக்குது.
வைரத்தைத் தீட்டிடவே
வைரம் வேண்டும்
நம்மை மாற்றிடவே
நாமே வேண்டும்.
தெளிந்த சிந்தனையோடு
தேர்ந்தெடுப்பீர் நல்லவரை
நோட்டுக்காக ஓட்டை விற்காதிர்  - உயிர்
விட்டுப் போகும்வரை
படித்தவரில் நல்லவரை
பதவியிலே அமரச்செய்வீர்
கறைபடிந்த கைகளுக்கு
கடிவாளம் போட்டிடுவீர்.
ஏழைமக்கள் வாழ்ந்திடவே
ஏணியாய் மாறிடுவீர்
வேலையில்லா பட்டதாரி இல்லையென
நிலை உருவாக்கிடுவீர்.
துள்ளும் இளம் உள்ளங்களுக்கு
வாய்ப்புத் தூண்டில் இடுவீர்
வல்லரசு ஆக்கிடவே
நல்லரசைத் தந்திடுவீர்


 என்றும் நட்புடன் ...
ராஜா பழனிசாமி



No comments:

Post a Comment