Monday, August 3, 2009

இளைஞர்களே வாருங்கள்

அன்பிருக்கும் ஏழைகள்
அடகுவைத்தனர் அறிவை
அறிவு இல்லாத
அரசியல் வாதிகளிடம்

வீதயிலே நடந்து வந்து
சாதி ஓட்டு கேட்டிடுவார்
நிதி கொடுத்து
நீதியை வாங்கிடுவார்

வாய்தவறி வருகின்ற
வார்த்தைகளை எல்லாம்
வாக்குறுதிஎன நமக்கு
வாக்கரிசி போட்டிடுவார்

தேனாகப் பேசிடுவார்
தேர்தலில் நிற்கும்போது
பாம்பாக சீறிடுவார்
பதவியில் அமரும்போது

நரம்பில்லாத நாக்குகொண்டு
நான்குஆயிரம் சொல் பேசிடுவார்
நான்கு வார்த்தை பேசமாட்டார்
நாற்க்காளிஇல் அமர்ந்தபின்னே

படிப்பறிவு இல்லாதோர்
பாராளுமன்றம் செல்லுகின்றனர்
படித்து பட்டம் பெற்றோர்
பாமரனைப்போல் வாழ்கின்றனர்

கற்றகல்வி எல்லாம்
கறைபடிந்து போனதப்பா
பெற்ற பட்டம் எல்லாம்
பெரும்துயரப் படுதப்பா










1 comment: